| 2522. | செஞ் சுடர்ச் செறி மயிர்ச் சுருள் செறிந்த செனியன், நஞ்சு வெற்பு உருவு பெற்று இடை நடந்த தென, மா மஞ்சு சுற்றிய வயங்கு கிரி வாத விசையில் பஞ்சு பட்டது பட, படியின் மேல் முடுகியே. |
செஞ்சுடர் - சிவந்த ஒளியுடைய; செறிமயிர்ச் சுருள் செறிந்த - அடர்ந்தசுருட்டை மயிர்கள் கொண்ட; செ(ன்)னியன் - தலையுடையனாகி; நஞ்சு வெற்பு உருவுபெற்று - நஞ்சு, மலையின் வடிவைக் கொண்டு; இடை நடந்தது என - அவ்வனத்திடைநடந்தது போல; மாமஞ்சு சுற்றிய வயங்குகிரி - பெரிய மேகம் சூழ்ந்து விளங்கும்மலைகள், (கால்களின் நடை வேகத்தால்); வாத விசையில் - காற்றின் விசையால்; பஞ்சு பட்டது பட - பஞ்சடையும் நிலையை அடையும் படி; படியின்மேல் முடுகி - நிலத்தின் மீது விரைந்துநடந்து; ஏ - அசை. விராதன் நஞ்சுபோல் கொடுமையும் மலைபோல் வலிய தோற்றமும் கொண்டவன். அவன் நடைவேகத்தால் எதிர்ப்படு மலைகள். பஞ்சுபோல் சிதறிப் பறந்தன. தாடகை வருகையையும் இவ்வாறே‘கிரிகள் பின் தொடர வந்தாள் (368) _ என்பார்._நஞ்சு வெற்புருவு பெற்றிடை நடந்தது என்பது இல்பொருளுவமை. செனியன் - சென்னியன், இடைக்குறை. 6 |