2525. | படையொடு ஆடவர்கள், பாய் புரவி, மால் களிறு, தேர், நடைய வாள் அரிகள், கோள் உழுவை, நண்ணியஎலாம் அடைய வாரி, அரவால் முடி, அனேக வித, வன் தொடையல் மாலை துயல்வந்து உலவு தோள் பொலியவே. |
படையொடு ஆடவர்கள் - போர்க் கருவி ஏந்திய வீரர்கள்; பாய் புரவி - தாவிப்பாயும் குதிரைகள்; மால்களிறு - பெரிய மத யானைகள், தேர் - தேர்கள்;நடைய - உலாவும்; வாள் அரிகள் - ஒளியுடைய சிங்கங்கள்; கோள் உழுவை -உயிரைக் கொள்வதைத் தொழிலாகக் கொண்ட புலிகள்; நண்ணிய எலாம் - இவ்வாறுதன்னை அடைந்த யாவற்றையும்; அடைய வாரி - முழுவதும் வாரிக் கொண்டு வந்து, அரவால் முடி - பெரிய பாம்பால் தொகுத்துக்கட்டிய; அனேக வித வன் தொடையல் மாலை - பலவிதமான, வலிதாகத் தொடுக்கப்பட்ட மாலைகள்; துயல்வந்து - தொங்கி அசையும், உலவு தோள் - விசாலமான தோள்கள்; பொலிய - விளங்க, ஏ - அசை. ‘படையொடு... தேர்’ என நாற்படையும் வந்தன. வாரி என்றதால் எளிமையாக அள்ளி எடுத்தமைபுலனாம் 9 |