2528.பம்பு செக்கர், எரி, ஒக்கும்
     மயிர் பக்கம் எரிய,
கும்பம் உற்ற உயர் நெற்றியின்
     விசித்து, ஒளிகுலாம்
உம்பருக்கு அரசன் மால் கரியின்
     ஓடை, எயிறு ஒண்
கிம்புரிப் பெரிய தோள்
     வளையொடும், கிளரவே

    பம்பு செக்கர் எரி ஒக்கும் மயிர் - பரவிய செவ்வானத்தையும்
தீயையும் போன்ற செம்மயிர்; பக்கம் எரிய - பக்கங்களில்விளங்க, கும்பம்
உற்ற உயர் நெற்றியின் விசித்து -
குடம் போன்ற மத்தகங்கள்உயர்ந்த
நெற்றியில் கட்டப் பெற்ற; ஒளி குலாம் உம்பருக்கு அரசன் மால் கரியின்
ஓடை -
ஒளி வீசும் தேவர்கட்கு அரசனான இந்திரனின் பெரிய ஐராவதம்
எனும் யானையின் நெற்றிப்பட்டம்; எயிறு ஒண் - அந்த யானையின்
தந்தங்களில் பூட்டிய ஒளி மிக்க; கிம் புரி- பூண்கள்; பெரிய தோள்
வளையொடும் -
பெரிய வாகுவலயத்துடன்; கிளர - விளங்க; ஏ - ஈற்றசை.

     செம்பட்டை மயிர் உடற்புறத்தே தொங்கிய விராதனுக்கு ஐராவதத்தின்
ஓடை நெற்றிப்பட்டமாகவும், கிம்புரி வாகுவலயமும் ஆயின, பம்புதல் -
பரத்தல், உற்ற - உவமஉருபு.                                    12