2529.தங்கு திண் கரிய காளிமை
     தழைந்து தவழ,
பொங்கு வெங் கொடுமை என்பது
     புழுங்கி எழ, மா
மங்கு பாதகம், விடம், கனல்,
     வயங்கு திமிரக்
கங்குல், பூசி வருகின்ற கலி
     காலம் எனவே

    தங்கு திண் கரிய காளிமை - பொருந்திய வலிய மிகுந்த கறுப்பு;
தழைந்து தவழ - செழித்து விளங்க, பொங்குவெங்கொடுமை என்பது -
மேற்கிளம்பும் பெரும் கொடுமை எனும் தீயபண்பு; புழுங்கி எழ -கோபித்து
மேற்கிளம்ப; மங்கு மா பாதகம் - மிகக்கேட்டை உண்டாக்கும்
பெரும்பாவமும்; விடம் கனல் - நஞ்சும் நெருப்பும்; வயங்கு திமிர -
விளங்கிச்செருக்கிய; கங்குல் பூசி வருகின்ற - இருளைப் பூசிக்கொண்டு
வரும்; கலிகாலம் என -கலிகாலம் (எதிரே உருவெடுத்து வந்தாற்) போல;
ஏ -
ஈற்றசை.

     காளிமை - கருமை. விராதனின் நிறம் கறுப்பு; வடிவோ கொடுமை;
செயலோ தீவினை; அவனுக்குநஞ்சும் தீயும் கலிகாலமும் உவமை. தன்மைத்
தற்குறிப்பேற்ற அணி.                                          13