2534.சார வந்து, அயல் விலங்கினன்-
     மரங்கள் தரையில்
பேர, வன் கிரி பிளந்து உக,
     வளர்ந்து இகல் பெறா
வீர வெஞ் சிலையினோர் எதிர்,
     விராதன் எனும் அக்
கோர வெங் கண் உரும்ஏறு அன
     கொடுந் தொழிலினான்.

    விராதன் எனும் அக்கோர வெங்கண் உரும் ஏறு அன கொடுந்
தொழி லினான் -
விராதன் என்று சொல்லப்படும் அந்த அச்சமூட்டும்
கொடிய கண்களையும் பேரிடி போன்ற கொடியதொழிலையுமுடையவன்;
(வரும் வேகத்தால்); மரங்கள் தரையில் பேர - மரங்கள்நிலத்தில் நின்ற
இடம் விட்டுப் பெயர்ந்து விழவும்; வன்கிரி பிளந்துக - வலியமலைகள்
பிளவுண்டு சிதறவும்; வளர்ந்து இகல் பெறாவீர வெஞ்சிலையினோர் எதிர்
சார வந்துஅயல் விலங்கினன் -
பேருருக்கொண்டு வளர்ந்து போரைப்
பெறாத வீரமும் கொடிய வில்லும்உடைய இராமலக்குவர் முன்னே அருகில்
வந்து எதிராகக் குறுக்கிட்டு நின்றான்.

     விலங்கினன் - குறுக்கிட்டான். விராதன் - எதிலும் நிறைவு
பெறாதவன்.                                                 18