2536. | காளை மைந்தர் அது கண்டு, கதம் வந்து கதுவ, தோளில் வெஞ் சிலை இடங் கொடு தொடர்ந்து, சுடர் வாய் வாளி தங்கிய வலங் கையவர், ‘வஞ்சனை; அடா! மீள்தி; எங்கு அகல்தி’ என்பது விளம்ப, அவனும் |
காளை மைந்தர் அது கண்டு கதம் வந்து கதுவ - இளம் எருது போன்ற இராமலக்குவர் அதனைப் பார்த்து, சினம் பிறந்து பற்றி; தோளில் வெஞ்சிலை இடங்கொடு - தோளிலே மாட்டிய கொடிய வில்லைத் தம் இடக்கையில் பிடித்துக்கொண்டு; சுடர் வாய் வாளி தங்கிய வலங் கையவர் - ஒளி பொருந்திய அம்புகள் கொண்டவலக்கையினராய்; தொடர்ந்து - அவ்விராதனைப் பின்தொடர்ந்து, அடா! வஞ்சனைமீள்தி எங்கு அகல்தி - ஏ அற்பனே! இச்செயல் வஞ்சகமானது; திரும்புவாயாக! நீ எங்கேசெல்கிறாய்?, என்பது விளம்ப - என்னும் சொற்களைக் கூற; அவனும் - அவ்வரக்கனும். காளை - பெருமிதம், வலிமை, நடை முதலியவற்றில் சிறந்ததால் ஆடவர்க்கு உவமை. அகல்தி -முன்னிலை ஏவல் ஒருமை வினைமுற்று. 20 |