இராமன் போர் தொடுத்தல்

2538. வீரனும் சிறிது மென் முறுவல்
     வெண் நிலவு உக,
‘போர் அறிந்திலன் இவன்; தனது
     பொற்பும் முரணும்
தீரும், எஞ்சி’ என நெஞ்சின் உறு
     சிந்தை தெரிய,
பார வெஞ் சிலையின் நாண் ஒலி
     படைத்த பொழுதே,

    வீரனும் சிறிது மென்முறுவல் வெண்நிலவு உக - இராமனும்
புன்சிரிப்பாகிய வெள்ளிய நிலவொளி தோன்ற; போர் அறிந்திலன் இவன்-
போர் செய்யும் முறையை அறிந்தவன் அல்லன் இவன்; தனது பொற்பும்
முரணும் எஞ்சி தீரும் என-
இவனது பொலிவும் வலிவும் குறைந்து
அழியும் என்று; நெஞ்சின் உறு சிந்தை தெரிய - தன்மனத்தின் எண்ணம்
வெளிப்பட; பார வெஞ்சிலையின் நாண் ஒலி படைத்த பொழுது- வலிய
கொடிய வில்லின் நாண் ஓசையை உண்டாக்கிய காலத்தில்; ஏ - ஈற்றசை.

     போரிடாமல் வஞ்சகமாய்ச் சீதையைக் கவர்ந்து சென்றதால் விராதன்
போரறிந்திலன்எனப்பட்டது. பொலிவு - வீரத்தால் விளங்கும் தன்மை.
முறுவல், நிலவு - ஆகுபெயர்.                                  22