விராதன், சீதையை விடுத்து இராமலக்குவரை எதிர்த்தல் 2540. | வஞ்சகக் கொடிய பூசை நெடு வாயில் மறுகும் பஞ்சரக் கிளி எனக் கதறு பாவையை விடா, நெஞ்சு உளுக்கினன் என, சிறிது நின்று நினையா, அஞ்சனக் கிரி அனான் எதிர் அரக்கன் அழலா |
அரக்கன் - அவ்விராதன்; வஞ்சகக் கொடிய பூசை நெடுவாயில் - வஞ்சத்தன்மையுடைய கொடிய பூனையின்பெரிய வாயிலே; மறுகும் பஞ்சரக் கிளி எனக் கதறு பாவையை விடா - அகப்பட்டுத்தவிக்கும் கூட்டிலுள்ள கிளி போலக் கூச்சலிடும் சீதையைக் கீழே விட்டு; நெஞ்சு உளுக்கினன் என - மனஞ்சிதைந்தவன் போல; சிறிது நின்று நினையா - சற்றே நின்று சிந்தித்து;அஞ்சனக் கிரி அனான் எதிர் அழலா - கரியமலை போன்ற இராமனுக்கு எதிரில்வந்துகோபித்து; பூசை - பூனை (4). பாவை - ஆகுபெயர் அஞ்சனம் - கருமை. 24 |