விராதன், சீதையை விடுத்து இராமலக்குவரை எதிர்த்தல் |     2540. | வஞ்சகக்     கொடிய பூசை நெடு      வாயில் மறுகும்     பஞ்சரக் கிளி எனக் கதறு      பாவையை விடா,     நெஞ்சு உளுக்கினன் என, சிறிது      நின்று நினையா,     அஞ்சனக் கிரி அனான் எதிர்      அரக்கன் அழலா |  
     அரக்கன் - அவ்விராதன்; வஞ்சகக் கொடிய பூசை நெடுவாயில் -     வஞ்சத்தன்மையுடைய கொடிய பூனையின்பெரிய வாயிலே; மறுகும் பஞ்சரக்     கிளி எனக் கதறு பாவையை விடா - அகப்பட்டுத்தவிக்கும் கூட்டிலுள்ள     கிளி போலக் கூச்சலிடும் சீதையைக் கீழே விட்டு; நெஞ்சு உளுக்கினன்     என - மனஞ்சிதைந்தவன் போல; சிறிது நின்று நினையா - சற்றே நின்று     சிந்தித்து;அஞ்சனக் கிரி அனான் எதிர் அழலா - கரியமலை போன்ற     இராமனுக்கு எதிரில்வந்துகோபித்து;      பூசை - பூனை (4). பாவை - ஆகுபெயர் அஞ்சனம் - கருமை.    24  |