2543. | ‘இற்றது இன்றொடு இவ் அரக்கர் குலம்’ என்று, பகலே, வெற்ற விண்ணினிடைநின்று நெடு மீன் விழுவபோல், சுற்று அமைந்த சுடர் எஃகம்அது இரண்டு துணியா அற்ற கண்டம்அவை ஆசையினது அந்தம் உறவே |
இவ்வரக்கர் குலம் இன்றொடு இற்றது - இந்த இராக்கதக் கூட்டம் இந்த நாளோடு முடிந்தது; என்று - எனக் குறிபார்த்து; பகலேவெற்ற விண்ணினிடை நின்று நெடு மீன் விழுவ போல் - பகற்காலத்திலே வேகமற்ற வெறும்வானத்திலிருந்து பெரிய விண்மீன்கள் வீழ்வன போல; சுற்று அமைந்த சுடர் எஃகம் அது - சுற்றிலும் பொருந்திய ஒளியுடைய சூலம்; இரண்டு துணியா - இரண்டு துண்டாக்கப்பட்டு; அற்ற கண்டம் அவை - அழிந்த அத்துண்டங்கள்; ஆசையினது அந்தம் உற - திக்குகளின்எல்லையை அடைய; ஏ - ஈற்றசை. வெற்ற விண் - வேறு ஒன்றும் இல்லாத சூனியமான ஆகாயம். பகலில் விண்மீன்கள் விழுவதுகேட்டின் அறிகுறி. சூலத்தின் துண்டுகள் வானில் விண்மீன்களாக விழுந்த நிலை அரக்கர் அழிவுக்குஅறிகுறியாம். ஆசை - திக்கு. எ - டு ஆசை பத்திற்கும் (3422) அது, அவை என்பன பகுதிப் பொருள்விகுதி. 27 |