2545. | வட்டம் இட்ட கிரி அற்று உக, வயங்கு வயிரக் கட்டு அமைந்த கதிர் வாளி, எதிரே கடவலால், விட்ட விட்ட மலை மீள, அவன் மெய்யில், விசையால் பட்ட பட்ட இடம் எங்கும், உடல் ஊறுபடலும் |
வட்டம் இட்ட கிரி அற்று உக - விராதன் எறிந்த சூழ்ந்து வரும் மலைகள் பிளவுபட்டு விழுமாறு; (இராமன்) வயங்கு வயிரக் கட்டு அமைந்த கதிர்வாளி எதிரே கடவலால் - விளங்குகின்ற உறுதியான கட்டுப் பொருந்தியஒளிமிக்க அம்புகளை (விராதனுக்கு) எதிராக எய்தலால்; விட்ட விட்ட மலை மீள - (அவன்) மேன்மேல் எறிந்த மலை எல்லாம் திரும்பவும்; அவன் மெய்யில் - விராதன்உடலில், விசையால் பட்ட பட்ட இடம் எங்கும் உடல் ஊறு படலும் - வேகத்தோடுஎறிப்பட்ட இடங்களில் எல்லாம் உடம்பு காயம் பட்ட அளவில். ‘வட்டமிட்ட’ என்ற தொடரை வாளியுடன் சேர்ப்பதும் உண்டு. பட்ட பட்ட - மிகுதிபற்றிஅடுக்கு வந்தது. விராதன் எறிந்த மலைகள் இராமன் அம்பினால் திரும்பி அவனையே காயப்படுத்தின.ஊறு - புண். 29 |