2547.ஏறு சேவகன் இரண்டினொடு
     இரண்டு கணையால்
வேறு வேறு துணிசெய்து, அது
     விழுத்தி, விசையால்
மாறு மாறு, நிமிர்
     தோளிடையும் மார்பினிடையும்
ஆறும் ஆறும் அயில் வெங் கணை
     அழுத்த, அவனும்

    ஏறு சேவகன் - நாளும் வளரும் வீரப்பண்புடைய இராமன்;
இரண்டினொடு இரண்டு கணையால் - நான்குஅம்புகளால், வேறு வேறு
துணி செய்து அது விழுத்தி -
பல துண்டுகளாக வெட்டி அந்த
மராமரத்தைத் தள்ளி விட்டு; நிமிர் தோளிடையும் மார்பினிடையும் மாறு
மாறு -
உயர்ந்த தோள்களிலும் மார்பிலும் மாற்றி மாற்றி, விசையால்
ஆறும் ஆறும் அயில் வெங்கணைஅழுத்த -
வேகத்தால் பன்னிரண்டு
கொடிய அம்புகளைப் பதியும்படி எய்ய; அவனும் - அவ்வரக்கனும்

     விராதன் எறிந்த மராமரத்தை இராமன் நான்கு அம்புகளால் துண்டித்து
வீழ்த்தினான்.அவ்வரக்கன் மார்பிலும் தோளிலும் அவ்வாறே அம்புகளைச்
செலுத்தினான். ஏறு சேவகன் என்பதற்குநடை, வீரம், தோற்றப் பொலிவு
முதலியவற்றால் சிங்கம் போன்ற வீரன் எனலுமாம். இடை -இடம்.      31