2551. | உண்டு எழுந்த உணர்வு அவ்வயின் உணர்ந்து முடுகி, தண்டு எழுந்தனைய தோள்கொடு சுமந்து, தழுவி, பண்டு எழும் தனது வன் கதி பதிற்றின் முடுகிக் கொண்டு எழுந்தனன் - விழுந்து இழி கொழுங் குருதியான். |
விழுந்து இழி கொழுங் குருதியான் - கீழே விழுந்து பெருகி வழியும் மிகுந்த இரத்தத்தை உடையவனாகி; அவ்வயின் உண்டு எழுந்தஉணர்வு உணர்ந்து - அவ்விடத்தில் மீண்டும் எழும் உணர்ச்சி அடைந்தவனாகி; முடுகித்தண்டு எழுந்தனைய தோள்கொடு தழுவிச் சுமந்து - விரைந்து தண்டாயுதம் போன்ற தன்தோள்களைக் கொண்டு இராமலக்குவரை அணைத்துத் தூக்கி; பண்டு எழும் தனதுவன்கதி(ப்)பதிற்றின் முடுகி - பழமையில் தன்னிடம் உண்டாகும் வலிய வேகத்தில்பதின்மடங்கு விரைவு கொண்டு; கொண்டு எழுந்தனன் - மேற்கொண்டு எழும்பியவனாய் இரத்த ஆறு பெருகிட உணர்வு சோர்வுற்ற விராதன் மீண்டும் உணர்வுற்று இராமலக்குவரைத் தன்தோளில் சுமந்து விரைந்து சென்றனன். தண்டு - தண்டம் என்பதன்திரிபு. 35 |