2554.மா தயா உடைய தன் கணவன்,
     வஞ்சன் வலியின்
போதலோடும் அலமந் தனள்;
     புலர்ந்து, பொடியில்,
கோதையோடும் ஓசி கொம்பு என,
     விழுந்தனள் குலச்
சீதை, சேவல் பிடியுண்ட சிறை
     அன்னம் அனையாள்.

    குலச்சீதை - உயர்குலத்துதித்த சீதை; மா தயா உடைய தன்
கணவன் வஞ்சன் வலியின் போதலோடும் -
பெருங்கருணை பூண்ட தன்
துணைவனாம் இராமன் வஞ்சம் செய்த விராதனின் வலிமைக்குட்பட்டுத்
தூக்கிச் செல்லும்போது; அலமந்தனள் - வாடிக் கலங்கினாள்; புலர்ந்து
சேவல்பிடியுண்ட சிறை அன்னம் அனையாள் -
வாட்டமடைந்து
ஆணன்னம் பிறரால் பிடிபட மென் சிறகுள்ளபெண் அன்னம்
போன்றவளாய்; பொடியில் கோதையோடும் ஓசி கொம்பு என
விழுந்தனள் -
புழுதியில் கூந்தலொடு துவளும் பூங்கொம்பு போல
விழுந்தாள்.

     தன் கூந்தல் புழுதியில் புரளப் பூங்கொம்பு போல் சீதை விழுந்தாள்.
குலம் - நிமிகுலம்.சனகன் யாகசாலை அமைக்க நிலத்தை உழுதபோது
உழுபடைச் சாலில் கிடைத்ததால் சீதைஎனப்பட்டாள். சேவல் - ஆண்
அன்னம், கோதை - கூந்தல். கோதையோடும் ஓசிகொம்பு -காற்றினால்
அசையும் பூங் கொம்பு எனவும் கொள்வர்.                         38