2557.‘ஏக நின்ற நெறி எல்லை கடிது
     ஏறி, இனிதின்
போகல் நன்று என நினைந்தனென்;
     இவன், பொரு இலோய்!
சாகல் இன்று பொருள் அன்று, என
     நகும் தகைமையோன்,
வேக வெங் கழலின் உந்தலும்,
     விராதன் விழவே,

    பொரு இலோய் - ஒப்பில்லாதவனே! ஏகநின்ற நெறி எல்லை கடிது
ஏறி -
இக்காட்டில் செல்ல வேண்டிய வழியின் முடிவை விரைவில் இவன்மீது
ஏறி, இனிதின் போகல்நன்று என நினைந்தனென் - இனிதாகச்
செல்லுதல் நல்லது என்று எண்ணினேன்; இவன் சாகல்இன்று பொருள்
அன்று -
(விராதனாம்) இவன் இறப்பது இன்று நமக்கு அரிய செயல் அன்று,
எனநகும் தகைமையோன் - என எள்ளல் குறிப்போடு கூறிய இராமன்;
விராதன் விழ - அவ்வரக்கன் கீழே விழ; வேக வெங்கழலின் உந்தலும்-
வேகமாகத் தன் வலிய வீரக்கழல் அணிந்த திருவடியால் உதைக்கவும் ஏ -
ஈற்றசை.

     ‘நாம் செல்லக் கருதிய வழியாகஇவ்வரக்கன் செல்வதால் வருத்தமின்றி
இனிது நடக்கக் கருதினேன். இவனைக் கொல்வது அரிதன்று’என எள்ளற்
சிரிப்புடன் இராமன் கூறியது முன் செய்யுளில் இலக்குவன் ‘தேவிதுயர்கூர
விளையாடல்தொழிலோ’ என்ற கேள்விக்குரிய விடையாய் உளது.
வெங்கழல் - அடியார் விரும்பும் திருவடிஎனலாம். சாகல் - சாதல்
பொருவிலோய் எனக் கொண்டு போர் செய்யும் வில்லை உடையோய்
எனவும் கொள்வர்.                                             41