2559. | புண்ணிடைப் பொழி உயிர்ப் புனல் பொலிந்து வரவும், விண்ணிடைப் படர்தல் விட்டு, எழு விகற்பம் நினையா, எண்ணுடைக் குரிசில் எண்ணி, ‘இளையோய்! இவனை, இம் மண்ணிடைக் கடிது பொத்துதல் வழக்கு’ எனலுமே |
புண்ணிடைப் பொழி உயிர்ப் புனல் பொலிந்து வரவும் - உடலிற் பட்ட புண்களிலிருந்து பெருகிய இரத்த வெள்ளம் விளங்கி ஓடவும்; விண்ணிடைப்படர்தல் விட்டு - வானில் செல்வதைத் தவிர்த்து; எழு விகற்பம் நினையா - அவன்எழுந்து செல்லும் மாறுபாட்டை நினைத்து; எண்ணுடைக் குரிசில் எண்ணி - எண்ணத்தில்சிறந்த இராமன் உணர்ந்து; இளையோய்! - தம்பி!; இவனை இம் மண்ணிடைக் கடிதுபொத்துதல் வழக்கு - இவ்வரக்கனை இந்த நிலத்தில் விரைவாக மூடுதல் வழக்கு; எனலுமே -என்ற அளவில்; ஏ - ஈற்றசை. உயிர்ப்புனல் உயிர் இருப்பதற்காக உடலில் ஓடும் இரத்தம். விராதன் படைகளால்இறவாததால் மண்ணில் புதைத்தலை இராமன் கூறினான். குரிசில் - பெருமையிற் சிறந்தவன்,ஆண்பால் சிறப்புப் பெயர். 43 |