3. அகத்தியப் படலம்

257.'அருந் திறல் உலகு ஒரு
     மூன்றும் ஆணையின்
புரந்திடும் தசமுகத்து
     ஒருவன், பொன்றிலாப்
பெருந் தவம் செய்தவன்,
     பெற்ற மாட்சியால்
வருந்தினெம் நெடும் பகல் -
     வரத! - யாம் எலாம்.

    தசமுகத்து ஒருவன் - பத்துத் தலை கொண்ட இராவணன்;
பொன்றிலா - அழியாத.                                   14-1