2570. | தாய்தன்னை அறியாத கன்று இல்லை; தன் கன்றை ஆயும் அறியும்; உலகின் தாய் ஆகின், ஐய! நீ அறிதி எப் பொருளும்; அவை உன்னை நிலை அறியா; மாயை இது என்கொலோ?- வாராதே வரவல்லாய்! |
வாராதே வரவல்லாய் - (அடியார்க்கு) வருதற்கு 'அரியார் போலிருந்து மிக எளியார்போல் வரும் வல்லமை உடையானே!; தாய் தன்னை அறியாத கன்று இல்லை - தன் தாயைத் தெரிந்து கொள்ளாத கன்று இல்லை; தன் கன்றை ஆயும் அறியும் - (அதுபோல்) தாயும் தன் கன்றை அறிந்து கொள்ளும்; ஐய! -தலைவனே!; உலகின் தாய் ஆகின் எப்பொருளும் நீ அறிதி - எல்லா உலகங்களுக்கும்அன்னை ஆனதால் எல்லாப் பொருள்களையும் நீ அறிகிறாய்; அவை உன்னை நிலை அறியா - அப்பொருள்கள் உன் தன்மையை அறியாதுள்ளன; மாயை இது என் கொலோ? - இம்மாயச் சுழல்எதுவோ? (என்னால் அறிய முடியவில்லை). வாராதே வரவல்லாய் என்பதை வந்தாய் போல வாராதாய் வாராதாய் போல் வருவானே' என்றபெரியார் திருவாய்மொழிப் பாசுரத்துடன் (60 : 9) ஒப்பிடின் மேலும் தெளிவுகிட்டும். தாய்தன்னைக் கன்றறிவதை நாலடியாரும் கூறும் (101). ஆயின் உயிர்களை நீ படைத்தாலும் அவை உன்னை அறியவில்லை. நீயோ எல்லாம் அறிந்தவன். 54 |