2571."பன்னல் ஆம்" என்று உலகம்
     பலபலவும் நினையுமால்;
உன் அலால் பெருந் தெய்வம் உயர்ந்துளோர்
     ஒழுக்கு அன்றே;
அன்ன ஊர்தியை முதல் ஆம்
     அந்தணர்மாட்டு அருந் தெய்வம்
நின் அலால் இல்லாமை
     நெறிநின்றார் நினையாரோ?

    உலகம் - உலகமக்கள்; "பன்னல் ஆம்" என்று - துதிக்கலாம் என்று;
பலபலவும் நினையும் - பல்வேறு தெய்வங்களை நினைப்பர்; (ஆனால்);
உன் அலால் பெருந்தெய்வம் உயர்ந்துளோர்ஒழுக்கு அன்றே -
உன்னைத் தவிர வேறு பெரிய கடவுள் உண்டெனக் கருதல் உயர்ந்த
ஞானியரின்செயல் அன்று; அன்ன ஊர்தியை முதல் ஆம் அந்தணர்
மாட்டு -
அன்ன வாகனமுடைய பிரமனைமுதலாகக் கொண்ட
அந்தணர்களால்; அருந்தெய்வம் நின் அலால் இல்லாமை - வழிபடும்
அரிய கடவுள் உன்னை அல்லாமல் வேறு இல்லா உண்மையை;
நெறிநின்றார் நினையாரோ? - பலசமய நெறி நின்றவர்கள் எண்ணிப்
பாராரோ? (பிறநெறியில் சென்று உண்மை அறியாது உள்ளனர்என்ற
குறிப்பைப் புலப்படுத்தும்)

     பன்னுதல் - பல முறை கூறல். ஒழுக்கு - ஒழுக்கம். நடை, ஆசாரம்,
அந்தணர் - அழகியதட்பத்தை உடையவர், ஆல், ஏ - அசைகள்      55