விராதன் தன் வரலாறு கூறல்.

2577.இற்று எலாம் இயம்பினான்
நிற்றலோடும், 'நீ இவ்வாறு
உற்றவாறு உணர்த்து' எனா,
வெற்றியான் விளம்பினான்

    இற்று எலாம் இயம்பினான் நிற்றலோடும் - இவ்விதமாய்
எல்லாவற்றையும் சொன்ன விராதன் அவ்வாறு சொல்லி நின்ற அளவில்; 'நீ
இவ்வாறு உற்றவாறு உணர்த்து' எனா வெற்றியான் விளம்பினான் -
நீ
இவ்விதம் அரக்கனாகப்பிறந்த வரலாற்றை அறிவிப்பாய்' என்று இராமன்
கூறப் பிறவியை வென்றவனாம் விராதன் கூறத்தொடங்கினான்.

     வெற்றியான் - விராதனை வென்ற இராமனும் ஆவான். இற்று எலாம்-
ஒருமை, பன்மைமயக்கம்.                                       61