2578.கள்ள மாய வாழ்வு எலாம்
விள்ள, ஞானம் வீசு தாள்
வள்ளல், வாழி! கேள்! எனா,
உள்ளவாறு உணர்த்தினான்

    கள்ளமாய வாழ்வு எலாம் விள்ள - திருட்டும் வஞ்சகமும் உடைய
என் இப்பிறவி வாழ்க்கையை எல்லாம் விண்டு போக; ஞானம் வீசுதாள்
வள்ளல் வாழி! கேள் எனா -
ஞானத்தை அருளும் திருவடி உடைய
வள்ளல் இராமனே!வாழ்வாயாக! நீ கேட்டருள்க என்று; உள்ளவாறு
உணர்த்தினான் -
தன் வரலாற்றை உள்ளபடிகூறுவானாயினான்.

     பொதுவாக வாழ்க்கையையே 'கள்ள மாயவாழ்வு' எனக் குறித்தான்
எனலுமாம், வீசுதல்-போய்ப் பரவி வீழச் செய்தல். தன் சாபத்தைப் போக்கி
அறியாமையை நீக்கி ஞானத்தைஅருளியதால் வள்ளல் என்றான்.       62