2581. | அன்ன சாபம் மேவி நான் "இன்னல் தீர்வது ஏது" எனா "நின்ன தாளின் நீங்கும்" என்று உன்னும் எற்கு உணர்த்தினான் |
நான் அன்ன சாபம் மேவி- நான் அச்சாபத்தை அடைந்து; இன்னல் தீர்வது ஏது எனா - இத்துன்பமாம் சாபம் எனக்குத்தீர்வது எவ்வாறு என நான் கேட்க; நின்ன தாளின் நீங்கும் என்று - உன்னுடைய திருவடிபடும் அளவில் இச்சாபம் என்னை விட்டு நீங்கும் என்று; உன்னும் எற்கு உணர்த்தினான் - ஆராய்ந்து நோக்கும் எனக்குத் (குபேரன்) தெரிவித்தான். எற்கு - எனக்கு, அசுரச்சாரியை இன்றிவந்தது. 65 |