2583.தூண்ட நின்ற தொன்மைதான்
வேண்ட நின்ற வேத நூல்
பூண்ட நின் பொலம் கொள் தாள்
தீண்ட இன்று தேறினேன்

    தூண்ட நின்ற தொன்மை தான் - தூண்டுவதற்காக (என்னுள்)
அமைந்து நின்ற என் பழைய நல்வினைதான்; வேண்ட நின்ற வேத நூல்-
விரும்ப நின் எதிரே வந்து நின்ற வேத நூல்கள்; பூண்ட நின் பொலம்
கொள் தாள்தீண்ட -
அணிந்துள்ள உன் அழகிய திருவடி என்னைத்
தீண்ட; இன்று தேறினேன் - இப்போது என் சாபம் தீர்ந்து நல்லறிவுற்று
உய்ந்தேன்.

     நின்ற வேதம் - நிலை பெற்ற வேதமுமாம். பொலன் கொள் தாள் -
பொற் கழலணிந்த திருவடிஎனவும் உரைப்பர். தன்னை ஓதி உணர்ந்தவர்க்கு
நல்லறிவைத் தூண்டி நின்றும் பழமையாகத்தான்(மக்களால்) விரும்பி நின்றும்
விளங்கும் வேதம் என முன்னடிகட்குப் பொருள் கூறுவர்.            67