2584.திறத்தின் வந்த தீது எலாம்
அறுத்த உன்னை ஆதனேன்
ஒறுத்த தன்மை ஊழியாய்!
பொறுத்தி! என்று போயினான்

    ஊழியாய்! - ஊழிக்காலத்தும் அழியாது நிற்பவனே!; திறத்தின் வந்த
தீது எலாம் அறுத்த உன்னை -
என் வினை ஆற்றலுக்கு ஏற்ப வந்த
தீவினைகளை அழித்த உன்னை; ஆதனேன் - மூடனாகியநான்; ஒறுத்த
தன்மை பொறுத்தி-
பகைத்துச் செய்த தீமைகளைப் பொறுத்தருள்க; என்று
போயினான் -
என்று சொல்லி (விராதன் தன் பழைய கந்தருவ வடிவில்
தும்புரு என்றபெயருடன்) வானுலகு சென்றான்.

     தீதெலாம் - ஒருமை, பன்மை மயக்கம்.                      68