இராமன் முதலியோர் முனிவர் வாழும் சோலையை அடைதல்

2585.'தேவு காதல் சீரியோன்
ஆவி போயினான்' எனா,
பூ உலாவு பூவையோடு
ஏ வலாரும் ஏகினார்

    தேவு காதல் சீரியோன் ஆவி போயினான் எனா - தேவரும்
விரும்பத்தக்க சிறப்புள்ள விராதன் உயிர் நீங்கினான் என்று; பூ உலாவு
பூவையோடுஏவலாரும் ஏகினார் -
தாமரைப் பூவில் வாழும் திருமகளாம்
சீதையுடன், அம்புப் போர் செய்யவல்ல இராமலக்குவர் அவ்விடம் விட்டுச்
சென்றார்.

     பூ உலாவு பூவை - தாமரை மலரில் வாழும் திருமகள். பூ - அழகு,
பொலிவுமாம். பூவை -நாகணவாய்ப் பறவை போன்ற சீதை; விராதன்
செயலால் அஞ்சிப் பொலிவிழந்த சீதை அவன்அழிந்ததும் மீண்டும்
பொலிவுற்றாள். ஏவலார் - எல்லா உலகங்களையும் அடிமையாகக் கொண்டு
ஆணைசெலுத்த வல்லவர் என்றுமாம்.                            69