2586. | கை கொள் கால வேலினார் மெய் கொள் வேத மெய்யர் வாழ் மொய் கொள் சோலை, முன்னினார்; வைகலானும் வைகினான் |
கைகொள் காலவேலினார் - கையில் ஏந்திய யமன் போல் கொடிய வேலையுடைய இராமலக்குவர்; மெய்கொள் வேத மெய்யர்வாழ் மொய் கொள் சோலை முன்னினார் - மெய்யாகிய வேதமே வடிவெடுத்த தவமுனிவர்வாழ்கின்ற மரங்கள் அடர்ந்த சோலையை அடைந்தனர்; வைகலானும் வைகினான் - நாளின்தலைவனாம் பகலவனும் மறைந்தான். வைகல் - பகல், வைகலான் பகலவன் என்ற பொருளில் சூரியனைக் குறித்தது. வேல் -படைகளின் பொதுப் பெயராய் வந்தது. பகைவர் உயிரைக் கவர்வதால் வேல் யமனுக்கு ஒப்பாம்.வாழ்வோர் காலத்தை வரையறுப்பவன் ஆதலால் காலன் எனப்பட்டான் யமன். வேத விதிப்படிகருமங்களைத் தவறாது செய்பவர் ஆதலின் வேத மெய்யர் என்பர். 70 |