2588. | செவ் வேலவர் சென்றனர்; சேறல் உறும் அவ் வேலையின் எய்தினன்- ஆயிரமாம், தவ்வாது இரவும் பொலி தாமரையின் வெவ்வேறு அலர், கண்ணினன், விண்ணவர் கோன். |
செவ்வேலவர் சென்றனர் - சிவந்த வேலினைக் கொண்ட இராமலக்குவர் அவ்வழியே போயினர்; சேறல் உறும் அவ்வேலையின்- சென்று அடையும் அப்பொழுதில்; தவ்வாது இரவும் பொலி தாமரையின்- கூம்பாமல்இரவிலும் மலர்ந்துள்ள தாமரை மலர்கள் போல; வெவ்வேறு அலர் ஆயிரமாம் கண்ணினன் - தனித்தனியே மலர்ந்து விளங்கும் ஆயிரம் கண்களை உடையவனாம்; விண்ணவர் கோன் எய்தினன்- தேவர் தலைவனாம் இந்திரன் அங்கு வந்து சேர்ந்தான். செவ்வேல் - சிறந்த வேலுமாம். வேல் என்பது போர்க் கருவிகளுக்குப் பொது. வேலை -வேளை. இந்திரன் கண்கள் இமையாமல் இருப்பதால் இரவும் பொலி தாமரை உவமையாயிற்று. இதுஇல்பொருளுவமை - வெவ்வேறு அலர் கண் என்பது இந்திரனுக்குக் கௌதமமுனி் சாபத்தால் உடலெங்கும்கண் பெற்றதைக் குறிக்கும். (472). தவ்வாது - தவறாமல் என்றும்உரைப்பர். 2 |