2591. | அனையின் துறை ஐம்பதொடு ஐம்பதும், நூல் வினையின் தொகை வேள்வி நிரப்பிய மா முனைவன்; முது தேவரில் மூவர் அலார் புனையும் முடி துன்று பொலங் கழலான்; |
அனையின் துறை நூல் வினையின் - வேள்வித் தீயிடத்து சாத்திரங்களிற் கூறிய செயலின்படி; ஐம்பதொடு ஐம்பதும் தொகை வேள்வி நிரப்பிய மா முனைவன் - நூறு எனும் தொகை கொண்ட அசுவமேத யாகங்களைச் செய்துமுடித்த பெருமை வாய்ந்த தலைவன்; முது தேவரில் மூவர் அலார் - பழமையான தேவர்களில்பிரமன், திருமால், சிவன் எனும் மூவர் அல்லாத மற்றைய தேவர்கள் யாவரும்; புனையும் முடி துன்று பொலங்கழலான் - தரித்துள்ள கிரீடங்கள் படிவதான பொன்னால் அமைந்த வீரக் கழலைஅணிந்தவன் (இந்திரன்). நூறு யாகங்களை முடித்தவன் என்பதால் இந்திரனைச் சதமகன் என்பர். இந்திரன் மூவர்க்குஅடுத்தவன். அனை - அனல். எதுகை நோக்கித் திரிந்தது துறை - ஏழாம் வேற்றுமைஉருபு. 5 |