2594. | திசை கட்டிய மால் கரி தெட்ட மதப் பசை கட்டின, கிட்டின பற்பல போர் விசை கட்டழி தானவர் விட்டு அகல் பேர் இசை கட்டிய ஒத்து இவர், சாமரையான்; |
திசை கட்டிய மால் கரி - எட்டுத்திக்குகளில் கட்டிய பெரிய எட்டு யானைகளின்; தெட்ட மதப் பசை - தெளிவான மதநீர்ப்பசையோடு, கட்டின - தொடர்புடையனவாக; கிட்டின பற்பல போர் - நெருங்கிய பலபல போர்களில்; விசை கட்டழி தானவர்- வேகமும் உறுதியும் அழிந்து தோற்றோடிய அசுரர்களினின்று; விட்டு அகல் பேர் இசை கட்டிய ஒத்து - நீங்கிஓடும்படியாகப் புகழை நிலை நாட்டியவை போல்; இவர் சாமரையான் - மேல் எழுந்துவிளங்கும் வெண் சாமரையை உடையவன் (இந்திரன்). தெட்ட - முற்றிய என்றுமாம். எட்டுத்திசை யானைகளின் மதமாகிய பசை உடலில் பட்டுக்கட்டிப் போகும்படி அசுரர்களுடன் கிட்டின போர் எனலாம். இந்திரனுக்குத் தோற்றோடிய அசுரர்உடல் மீது திக்குயானைகளின் மதநீர் பட்டு வெண்மையாய் உறைந்து போயிற்று. சாமரைகள்வெற்றித் தூண்களுக்கு உவமிக்கப் பெற்றன. தானவர் - தனு என்பவளிடம் தோன்றிய மரபினர். 8 |