2596.செற்றி, கதிரின் பொலி
     செம் மணியின்
கற்றைச் சுடர் விட்டு
     எரி கஞ்சுகியான்;
வெற்றித் திருவின் குளிர்
     வெண் நகைபோல்
சுற்றிக் கிளரும் சுடர்
     தோள் வளையான்;

    செற்றி கதிரின் பொலி - பதிக்கப் பெற்றுக் கிரணங்களால் ஒளி வீசி
நிற்கும்; செம்மணியின் சுடர்க்கற்றை - சிவந்த மாணிக்கங்களின் ஒளியின்
தொகுதி;விட்டு எரி கஞ்சுகியான் - வெளி விட்டு ஒளி வீசும் மேல்
அங்கி உடையான்; வெற்றித் திருவின் குளிர் வெண் நகை போல் -
விசயலக்குமியின் குளிர்ந்த வெண்பற்களின்சிரிப்புப் போல்; சுற்றிக் கிளரும்
சுடர்தோள் வளையான் -
சுற்றி விளங்குகின்ற ஒளிவீசும் தோள்
வளையங்களை உடையவன் (இந்திரன்).

     செற்றி - ஒளி பெறச் செதுக்கி என்பர். சிலர் தோள் வளைகளை
வெண்ணகைக்குஉவமையாக்கியதால் அவ்வணி முத்துக்கள் பதித்தவை
எனலாம். தோள்வளையம் - வாகுவலயம் எனும்அணி. கஞ்சுகி - கவசம்
என்பாருமுளர்.                                                10