2598. | மானா உலகம் தனில், மன்றல் பொரும், தேன் நாறு, நலம் செறி, தொங்கலினான்; மீனோடு கடுத்து உயர் வென்றி அவாம் வான் நாடியர் கண் எனும் வாள் உடையான்; |
உலகம் தனில் மானா - உலகத்தில் வேறு உவமை இல்லாத; மன்றல் பொரும்தேன்நாறு நலம் செறி தொங்கலினான் - தெய்வ மணம் வீசும், தேனின் சிறப்புமிக்க மாலைஉடையவன்; வான் நாடியர் மீனொடு கடுத்து உயர்வென்றி அவாம் கண் எனும் - தேவமகளிரின்மீன்களைப் பகைத்து மேலான வெற்றியை விரும்பும் கண்கள் எனும்; வாள் உடையான் - வாள்களைத் தன் படையாகக் கொண்டவன் (இந்திரன்) தேவமகளிர் கண்களுக்கு வாட்படை உவமை. அவர்கள் கண்களைக் கொண்ட, யாகம் செய்துஇந்திர பதவியை அடைபவரை வெல்பவன் இந்திரன். கடுத்து - ஒத்து எனலுமாம். தெய்வ மகளின் கண்எனும் வாள்களைத் தன் மேல் பதியப் பெற்றவன் எனலுமாம். மானா உலகம் என்பது பொன்னுலகத்தைக்குறிக்கும் என்பர் சிலர். 12 |