260.'ஆயிர கோடி என்று
     உரைக்கும் அண்டமேல்
மேய போர் அரக்கரே
     மேவல் அல்லதை,
தூய சீர் அமரர் என்று
     உரைக்கும் தொல் கணத்து
ஆயவர் எங்ஙன் என்று
     அறிந்திலோம், ஐயா!

    மேவல் அல்லதை - வாழ்கின்றார்களே யல்லாமல் (ஆயிரங்
கோடி அண்டங்களிலும் பொருந்தினவர்கள் அரக்கர்களே தவிர
அமரர் முதலியோர்க்கு இடம் இல்லை).                        14-4