சரபங்கன் இந்திரனை வரவேற்று வினவல் 2600. | நின்றான், எதிர்நின்ற நெடுந் தவனும் சென்றான், எதிர்கொண்டு; சிறப்பு அமையா, 'என்தான் இவண் எய்தியவாறு?' எனலும், பொன்றாத பொலங் கழ லோன் புகலும்; |
நின்றான் - (இந்திரன் அச் சரபங்கர் ஆசிரமத்தில்) சென்று நின்றான்; எதிர் நின்ற நெடுந்தவனும்எதிர் கொண்டு சென்றான் - அங்கு அவன் எதிரில் நின்ற பெருந்தவம் செய்தவனாகியசரபங்கனும் எதிர் வந்து அழைத்துச் சென்றான்; சிறப்பு அமையா - வந்த அதிதிக்குரியஉபசாரங்கள் செய்து; 'இவண் எய்தியவாறு என்' எனலும் - இங்கு நீ வந்த காரணம் யாது' எனக் கேட்டலும்; பொன்றாத பொலங் கழலோன் புகலும்- கெடாத பொற்கழல் அணிந்தஇந்திரன் பின்வருமாறு கூறினான்; தான் - அசை. நின்ற நெடுந்தவன் என்பதற்கு நிலைபெற்று நெடிய தவம் செய்த சரபங்க முனிவன் எனலுமாம்.இந்திரன் பெற்ற பல வெற்றிகளைக் குறிக்கும் பொலங்கழல் அணிந்த நிலை. 14 |