இந்திரன் பிரம லோகத்திற்கு அழைத்தலும் முனி மறுத்தலும்

2601."நின்னால் இயல் நீதி நெடுந்
     தவம், இன்று,
என்னானும் விளம்ப அரிது"
     என்று உணர்வான்
அந் நான்முகன்,
     நின்னை அழைத்தனனால்;
பொன் ஆர் சடை
     மாதவ! போதுதியால்;

    பொன் ஆர் சடை மாதவ - பொன்னிறம் பொருந்திய சடையுடைய
பெரும் தவத்தோனே; நின்னால் இயல் நீதி நெடுந்தவம் -உம்மால்
செய்யப்பெற்ற முறை தவறாத பெருந்தவம்; என்னானும் விளம்ப அரிது
என்றுஉணர்வான் -
எவ்வகையாலும் எடுத்துக் கூறுவதற்கு அரியது என்று
உணர்ந்தவனாகி; அந்நான்முகன் நின்னை அழைத்தனனால் - அந்த
நான்கு முகமுடைய பிரமதேவன் உம்மைத் தம்உலகிற்கு வர அழைத்தனன்
ஆதலின்; இன்று போதுதி - இப்பொழுது அங்குப்போகஎழுந்தருள்வீராக;
ஆல் - அசை.

     என்னால் கூடக் கூற இயலாது என்ற கூற்றை இந்திரன் கூற்றாகவும்
கொள்ளலாம். இந்திரன்ஐந்திரம் எனும் இலக்கணம் இயற்றிய அறிஞன்.
அத்தகையவனாலும் சரபங்கரின் தவப் பெருமை கூறுதற்கரியது என அவர்
பெருமை உணரப்பெறும்.                                       15