2604. 'சொல் பொங்கு பெரும் புகழோய்!
     தொழில் மாய்
சிற்பங்களின் வீவன
     சேர்கு வெனோ?
அற்பம் கருதேன்; என்
     அருந் தவமோ
கற்பம் பல சென்றது;
     காணுதியால்;

    சொல் பொங்கு பெரும் புகழோய் - சொற்களால் மேம்படும்
உயர்ந்த கீர்த்தியுடையயோனே!; மாய்தொழில் சிற்பங்களின் வீவனசேர்கு
வெனோ -
அழியும் வினையையுடைய அற்பப் பொருள்கள் போல
அழியக்கூடிய பதவிகளை யான்அடைவேனோ?; (மாட்டேன்); அற்பம்
கருதேன் -
கீழான இப்பதவியை அடைய விரும்பேன், என் அருந்தவமோ
கற்பம் பல சென்றது காணுதி -
யான் செய்த அரிய தவமோ பல
கற்பகாலங்கள்சென்றவை ஆயின; இதனை நீ அறிவாயாக; ஆல் - அசை.

     சொல் பொங்கு பெரும் புகழோய் என இந்திரனை விளித்தலால் வியா
கரண சாத்திரங்களைஅவன் நன்குணர்ந்தமை பெறப்படும். தொழில்மாய்
சிற்பம் என்றதால் பிரமலோகமும் அழியும்அற்பப் பொருள் என அறியலாம்.
கற்பம் - பலயுகங்கள் கொண்ட காலம்; சென்ற பாடலில் (2603)தொன்மையை
என்றமை இதன் பொருளை விளக்கி நிற்கும்.                         18