261."வெள்ளியங் கிரியிடை
     விமலன் மேலை நாள்,
கள்ளிய அரக்கரைக்
     கடிகிலேன்" எனா,
ஒள்ளிய வரம் அவர்க்கு
     உதவினான்; கடற்
பள்ளி கொள்பவன் பொருது
     இளைத்த பான்மையான்.

    வெள்ளியங்கிரி - கயிலை மலை; விமலன் - இயல்பாகவே
மலங்களின்று நீங்கியவன்; கடற் பள்ளி கொள்பவன் - திருமால்.14-5