2620.'ஏழையும் இளவலும் வருக'
     என, இனிதா
வாழிய அவரொடும் வள்ளலும்
     மகிழ்வதால்,
ஊழியின் முதல்முனி
     உறையுளை அணுக,
ஆழியில் அறிதுயிலவன் என
     மகிழ்வான்.

    (சரபங்கர் இராமனை நோக்கி) ஏழையும் இளவலும் வருக என -
சீதையும் இலக்குவனும் வருகஎன்று வரவேற்க; இனிதா வாழிய
அவரொடும் வள்ளலும் மகிழ்வால் -
நன்றாக,வாழ்விற்குரிய
அவர்களொடு இராமனும் மகிழ்ச்சியால்; ஊழியின் முதல் முனி உறையுளை
அணுக -
பிரளய காலத்திற்கு முன்னம் இருந்த சரபங்கரின் வாழுமிடத்தைச்
சேர; ஆழியில்அறிதுயிலவன் என மகிழ்வான் - திருப்பாற் கடலில்
யோக நித்திரை கொள்ளும் திருமால்இவனே என்று தெளிந்து சரபங்க
முனிவர் களிப்பெய்தினார்.

     ஏழை - பெண்ணாம் சீதையைக் குறித்தது. இக்காண்டத்தில் 'மழைக்
கண் ஏழை' என வருவதும்காண்க (3316), சரபங்கர் இராமனைப் பாற்கடலில்
அறிதுயில் கொள்ளும் திருமால் என எண்ணிக்களித்தார். வாழிய என்பது
அசை நிலையுமாம்.                                            34