2620. | 'ஏழையும் இளவலும் வருக' என, இனிதா வாழிய அவரொடும் வள்ளலும் மகிழ்வதால், ஊழியின் முதல்முனி உறையுளை அணுக, ஆழியில் அறிதுயிலவன் என மகிழ்வான். |
(சரபங்கர் இராமனை நோக்கி) ஏழையும் இளவலும் வருக என - சீதையும் இலக்குவனும் வருகஎன்று வரவேற்க; இனிதா வாழிய அவரொடும் வள்ளலும் மகிழ்வால் - நன்றாக,வாழ்விற்குரிய அவர்களொடு இராமனும் மகிழ்ச்சியால்; ஊழியின் முதல் முனி உறையுளை அணுக -பிரளய காலத்திற்கு முன்னம் இருந்த சரபங்கரின் வாழுமிடத்தைச் சேர; ஆழியில்அறிதுயிலவன் என மகிழ்வான் - திருப்பாற் கடலில் யோக நித்திரை கொள்ளும் திருமால்இவனே என்று தெளிந்து சரபங்க முனிவர் களிப்பெய்தினார். ஏழை - பெண்ணாம் சீதையைக் குறித்தது. இக்காண்டத்தில் 'மழைக் கண் ஏழை' என வருவதும்காண்க (3316), சரபங்கர் இராமனைப் பாற்கடலில் அறிதுயில் கொள்ளும் திருமால் என எண்ணிக்களித்தார். வாழிய என்பது அசை நிலையுமாம். 34 |