சரபங்கர் தீப் புக்கு வீடு பெறல் 2623. | ஆயிடை, அறிஞனும், அவன் எதிர் அழுவத் தீயிடை நுழைவது ஓர் தெளிவினை உடையான், 'நீ விடை தருக' என நிறுவினன், நெறியால், காய் எரி வரன் முறை கடிதினில் இடுவான். |
ஆயிடை - அப்பொழுது; அறிஞனும் அவன் எதிர் - சரபங்க முனிவரும் இராமன் எதிரில்; அழுவத்தீயிடை நுழைவது ஓர் தெளிவினை உடையான் - மிகுந்த நெருப்பில் புகுந்து உயிர் விடுவதான ஒருதெளிந்த அறிவினை மேற்கொண்டவராய்; காய் எரி வரன் முறை நெறியால் கடிதினில் இடுவான் -எரியும் தீயை சாத்திர முறைப்படி விரைவில் வளர்ப்பார் ஆகி; நீ விடை தருக எனநிறுவினன் - நீ எனக்கு விடை தருவாயாக எனக் கேட்டார். அழுவத்தீ அங்கிருந்த காட்டுத் தீ எனலுமாம் பரந்த ஒமகுண்டத்திலே என்பாருமுளர். இடுவான்என்பதை எச்சமாக்கி இடுவதற்கு விடை தருக எனவும் கூறலாம். 37 |