2626.'ஆயிர முகம் உள தவம்
     அயர்குவென், யான்;
"நீ இவண் வருகுதி" எனும்
     நினைவு உடையேன்;
போயின இரு வினை;
     புகலுறு விதியால்
மேயினை; இனி ஒரு வினை
     இலை;-விறலோய்!

    விறலோய் - வெற்றி வீரனே!; யான் ஆயிரமுகம் உளதவம் அயர்கு
வென் -
நான் பலவகைப்பட்டதவங்களைச் செய்பவன்; நீ இவண் வருகுதி
எனும் நினைவு உடையேன் -
நீ இவ்விடத்தில்எழுந்தருள்வாய் என்னும்
நினைவு மேற் கொண்டுள்ளேன்; புகலுறு விதியால் போயின இருவினை -
நேரிடும் முறைப்படி இரண்டு வினைகளும் அழிந்தன; மேயினை - அதன்
பயனாய் நீ இங்குஎனக்கு அருள்புரிய வந்தாய்; இனி ஒரு வினை இலை -
இனிமேல் நான் செய்யத்தக்க செயல்வேறு இல்லை.

     ஆயிரம் உகம் என ஆயிரக்கணக்கான யுகங்கள் என்பாருமுளர்.
புகலுறு விதி - சிறப்பித்துக்கூறும் விதியுமாம். தவம் செய்து இறைவன்
அருள் பெறுவர் வேறு செய்யதக்க வினை இல்லை என்றஉண்மையை இது
விளக்கும்.                                                    40