2628.'ஆதலின், இது பெற அருள்'
     என உரையா,
காதலி அவளொடு கதழ்
     எரி முழுகி,
போதலை மருவினன், ஒரு
     நெறி-புகலா
வேதமும் அறிவு அரு மிகு
     பொருள் உணர்வோன்.

    ஒரு நெறி புகலா வேதமும் -ஓர் உறுதி வழி எனக் கூறாத வேதமும்;
அறிவு அரு மிகு பொருள் உணர்வோன் - வேதங்களும்பரம்பொருளை
அறிய முடியாத மேம்பட்ட அப்பொருளின் நிலையை அறிந்த சரபங்கர்;
ஆதலின் இதுபெற அருள் என உரையா - ஆகையால் இந்தப் பரமபதம்
அடைவதை எனக்கு அருள்க என்று இராமனிடம்சொல்லி; காதலி
அவளொடு -
தம் மனைவியோடும்; கதழ் எரி முழுகி போதலை
மருவினன் -
பற்றி எரியும் பெரியநெருப்பில் புகுந்து பரமபதம் சேர்ந்தான்.

     மிகு பொருள் - பரம்பொருளாகிய இராமன் எனலுமாம். கதழ் - மிகுதி,
வலிமை. உரையா -செய்யா எனும் வாய்பாட்டு எச்சம்.               42