263. என்று, பினும், மா தவன்
     எடுத்து இனிது உரைப்பான்:
'அன்று, அமரர் நாதனை
     அருஞ் சிறையில் வைத்தே
வென்றி தரு வேல் தச
     முகப் பதகன் ஆதி
வன் திறல் அரக்கர்
     வலிமைக்கு நிகர் யாரே!

    தச முகப் பதகன் - இராவணனாகிய பாதகன்.              53-1