2630. | அண்டமும் அகிலமும்அறிவு அரு நெறியால் உண்டவன் ஒரு பெயர் உணர்குநர் உறு பேறு எண் தவ நெடிது எனின் இறுதியில் அவனைக் கண்டவர் உறு பொருள் கருதுவது எளிதோ? |
அண்டமும் அகிலமும் அறிவு அரு நெறியால் - எல்லா அண்டங்களையும் உலகங்களையும்யாரும் அறியாதபடி; உண்டவன் ஒருபெயர் உணர்குநர் உறுபேறு - எடுத்துண்ட திருமாலாம்இராமனின் ஒப்பற்ற நாமத்தைச் சிந்திப்பவர் அடையும் சிறப்பு; எண்தவ நெடிது எனின் - கணக்குக்கு எட்டாத பெரிது ஆகும் என்றால்; இறுதியில் அவனைக் கண்டவர் - முடிவில்அப்பரம் பொருள் ஆனவனைக் கண்டவர்; உறு பொருள் கருதுவது எளிதோ - அடையும் சிறந்த பொருளை நினைப்பது எளியதோ? (ஆகாது). அண்டமும் அகிலமும் உண்டவன் - யுகமுடிவில் எல்லாவற்றையும் திருமால் தன்னுள் அடக்குவதைக்குறிக்கும். ஒரு - ஒப்பற்ற. எண் - நினைப்பும் ஆம். பேறு - பெறும் பதவி. உறு - மிகுதிகுறிக்கும் உரிச்சொல். தவநெடிது என்பதையும் உரிச்சொற்றொடராகக் கொள்வர் சிலர். இது தொடர்நிலைச் செய்யுள் பொருட்பேறணி. 44 |