2632. மலைகளும், மரங்களும்,
     மணிக் கற்பாறையும்,
அலை புனல் நதிகளும்,
     அருவிச் சாரலும்,
இலை செறி பழுவமும்,
     இனிய சூழலும்,
நிலை மிகு தடங்களும்,
     இனிது நீங்கினார்.

    மலைகளும் - பல மலைகளையும்; மரங்களும் - பல மரங்களையும்;
மணிக்கற்பாறையும் - அழகியகற்பாறைகள் நிறைந்த இடங்களையும்;
அலை புனல் நதிகளும் - அலைகளோடு கூடிய நீர் மிக்கஆறுகளையும்;
அருவிச் சாரலும் - நீர் அருவி பாயும் மலைப் பக்கங்களையும்; இலை
செறிபழுவமும் -
இலைகள் அடர்ந்த சோலைகளையும்; இனிய சூழலும் -
இனிமையாய் விளங்கியஇடங்களையும்; நிலை மிகு தடங்களும் - ஆழம்
மிகுந்த நீர்நிலைகளையும்; இனிதுநீங்கினார் - இனிமையாகக் கடந்து
சென்றனர்.

     மலைகள் முதலிய இனிய சூழல் பலவும் இராமன் முதலியவர்களுக்குத்
தோற்றத்தால் கண்ணுக்குஇனிமையும் வாழ்தற்கு மகிழ்ச்சியும் அளித்தமையால்
நடந்து சென்ற வருத்தம் தெரியாமல்காட்சிகளில் இனிமை கண்டு
மகிழ்ந்தனர். பழுவம் - காடு, கல்லதரத்தமுமாம் (சீவக. 1185)சூழல் -
தவச்சாலைகளுமாம், நிலை - பரப்பு.                              2