2632. | மலைகளும், மரங்களும், மணிக் கற்பாறையும், அலை புனல் நதிகளும், அருவிச் சாரலும், இலை செறி பழுவமும், இனிய சூழலும், நிலை மிகு தடங்களும், இனிது நீங்கினார். |
மலைகளும் - பல மலைகளையும்; மரங்களும் - பல மரங்களையும்; மணிக்கற்பாறையும் - அழகியகற்பாறைகள் நிறைந்த இடங்களையும்; அலை புனல் நதிகளும் - அலைகளோடு கூடிய நீர் மிக்கஆறுகளையும்; அருவிச் சாரலும் - நீர் அருவி பாயும் மலைப் பக்கங்களையும்; இலை செறிபழுவமும் - இலைகள் அடர்ந்த சோலைகளையும்; இனிய சூழலும் - இனிமையாய் விளங்கியஇடங்களையும்; நிலை மிகு தடங்களும் - ஆழம் மிகுந்த நீர்நிலைகளையும்; இனிதுநீங்கினார் - இனிமையாகக் கடந்து சென்றனர். மலைகள் முதலிய இனிய சூழல் பலவும் இராமன் முதலியவர்களுக்குத் தோற்றத்தால் கண்ணுக்குஇனிமையும் வாழ்தற்கு மகிழ்ச்சியும் அளித்தமையால் நடந்து சென்ற வருத்தம் தெரியாமல்காட்சிகளில் இனிமை கண்டு மகிழ்ந்தனர். பழுவம் - காடு, கல்லதரத்தமுமாம் (சீவக. 1185)சூழல் - தவச்சாலைகளுமாம், நிலை - பரப்பு. 2 |