2638. | வேண்டின வேண்டினர்க்கு அளிக்கும் மெய்த்தவம் பூண்டுளர் ஆயினும், பொறையின் ஆற்றலால், மூண்டு எழு வெகுளியை முதலின் நீக்கினார்; ஆண்டு உறை அரக்கரால் அலைப்புண்டார் அரோ |
வேண்டின வேண்டினர்க்கு அளிக்கும் மெய்த் தவம் பூண்டுளர் ஆயினும் - விரும்பிச் செய்தவர்க்கு அவர்கள் விரும்பியவற்றை விரும்பிய வண்ணமே தரும் நற்றவம்மேற்கொண்டுள்ளவர் ஆனாலும்; பொறையின் ஆற்றலால் - பொறுமை என்னும் வலிமையால்; மூண்டு எழு வெகுளியை முதலின் நீக்கினார் - மேன்மேல்மிக்கு வரும் சினத்தை வேரொடு களைந்தார்கள். (ஆதலால்); ஆண்டுஉறை அரக்கரால்அலைப்புண்டார்- அக்காட்டில் தங்கியிருந்து இராக்கதர்களால் வருத்தமுற்றார். அரோ-அசை. இதனால் நிறை மொழி மாந்தராம் அம்முனிவர்கள் தம் தவ வலிமையால் அவ்வரக்கரைச்சினந்து சபித்து அழிக்காதிருத்தற்குக் காரணம் கூறப்பெற்றது. கூடா ஒழுக்கமாகியபொய்த்தவத்திலிருந்து நீக்குதற்கு 'மெய்த்தவம்' என்றார். தவத்தின் பயன் எய்த முதலில்சினத்தை நீக்கிப் பின் பொறுமையைப் பெற வேண்டும் என்பதாம். பொறை - காரணம் பற்றியோ, மடமை பற்றியோ ஒருவன் தமக்கு மிகை செய்த போது தாம் அதனை அவன் இடத்துச் செய்யாதுபொறுத்தல் ஆகும். தவத்தின் ஆற்றல் வேண்டிய வேண்டியாங்குஎய்தலாம். 8 |