264.'ஆயவர்கள் தங்கள் குலம்
     வேர்அற மலைந்தே,
தூய தவ வாணரொடு
     தொல் அமரர்தம்மை
நீ தனி புரந்திடுதல் நின்
     கடனது' என்றான்;
நாயகனும், 'நன்று!' என
     அவற்கு நவில்கின்றான்:

    ஆயவர்கள் தங்கள் - அரக்கர்களாகிய அவர்கள்.          53-2