2643. | 'வல்லியம் பல திரி வனத்து மான் என, எல்லியும் பகலும், நொந்து இரங்கி ஆற்றலெம்; சொல்லிய அற நெறித் துறையும் நீங்கினெம்; வில் இயல் மொய்ம்பினாய்! வீடு காண்டுமோ? |
வில்லியல் மொய்ம்பினாய் - வில்வித்தையில் வலிமையுடையவனே!: வல்லியம் பலதிரி வனத்து மான் என - பல புலிகள்சஞ்சரிக்கும் காட்டிலுள்ள மான்களைப் போல; எல்லியும் பகலும் நொந்து இரங்கி ஆற்றலெம் -இரவும் பகலும் மனம் நொந்து வருந்தி (அவ்வரக்கர் செய்யும் கொடுமைகளைப்) பொறுக்கமாட்டாதவர் ஆகி; சொல்லிய அறநெறித் துறையும் நீங்கினெம் - நூல் கூறிய தருமவழிகளிலிருந்து விலகினவர் ஆனோம்; வீடு காண்டுமோ? - இத்துன்பங்களிலிருந்து விடுதலை அடைவோமா? விற்கருவி கூறினமையால் 'அரக்கர்களை அழித்து எங்களைக் காப்பாய்' என்ற குறிப்புபுலப்படும். துன்ப மிகுதியைச் சுட்ட 'வீடு காண்டுமோ' என்றார். அறநெறியிலிருந்து வழுவியமையால்உயர்நிலை எவ்வாறு அடைவோம் என்று கூறினார் என்பர். புலி அரக்கர்களுக்கும் மான்முனிவர்களுக்கும் உவமை. 13 |