2648. | 'வேந்தன் வீயவும், யாய் துயர் மேவவும், ஏந்தல் எம்பி வருந்தவும், என் நகர் மாந்தர் வன் துயர் கூரவும், யான் வனம் போந்தது, என்னுடைப் புண்ணியத்தால்' என்றான் |
வேந்தன் வீயவும் - சக்ரவர்த்தியாம் தயரதன் இறப்பவும்; யாய் துயர் மேவவும் - தாயாம் கௌசலை துன்பம்அடையவும்; ஏந்தல் எம்பி வருந்தவும் - பெருமை உடைய என் தம்பி பரதன் வருத்தமடையவும்;என் நகர் மாந்தர் வன்துயர் கூரவும் - எனது (அயோத்தி) நகரத்தில் உள்ள மக்கள்வலிய துன்பத்தைப் பெரிதும் அடையவும்; யான் வனம் போந்தது என்னுடைப் புண்ணியத்தால்என்றான் - நான் காட்டிற்குப் புறப்பட்டு வந்தது என்னுடைய நல்வினையாலாகும் என்றுகூறினான். மகனைப் பிரிந்த துன்பத்தால் தயரதன் இறந்தான். அண்ணனைப் பிரிந்த துன்பத்தால்பரதன் வருந்தினான். அயோத்தி மக்கள் பட்ட துயரத்தை அயோத்தியா காண்டத்தில் நகர் நீங்குபடலம் கூறும் (1766-1817). முனிவர்களின் பகைதீர்த்து உதவி செய்யப் பெறுவதால் 'போந்தது என்னுடைப் புண்ணியத்தால்' என இராமன் கூறினான். யாய் - ஆய் என்பதன் போலி, ஏந்தல் - உயர் குணங்களை ஏந்தியவன், உயர்ச்சி,பெருமையும் ஆம். 18 |