2649. | 'அறம் தவா நெறி அந்தணர் தன்மையை மறந்த புல்லர் வலி தொலையேன் எனின், இறந்துபோகினும் நன்று; இது அல்லது, பிறந்து யான் பெறும் பேறு என்பது யாவதோ? |
அறம் தவா நெறி அந்தணர் தன்மையை - தருமத்திலிருந்து நீங்காத முனிவர்களின் பெருமையை; மறந்த புல்லர் வலி தொலையேன் எனின் -மறந்து (உங்களுக்குக்) கேடு செய்கின்ற அற்பர்களாகிய அரக்கர்களின் பலத்தை அழிக்காமற்போவேன் ஆனால்; இறந்து போகினும் நன்று - அவ்வரக்கர்களால் போரில்மரணமடைந்தாலும் நல்லதே; இது அல்லது - இந்த நல்ல செயலுக்குப் பயன்படுதல் அல்லாமல்;யான் பிறந்து பெறும் பேறு என்பது யாவதோ - நான் பிறந்ததனால் அடையும் நற்பயன் என்பதுதான் எதுவோ? (ஒன்றுமில்லை). தவா - கெடாத என்றுமாம் நன்றிது - நன்று+இது. இது என்பது அசைநிலை. இராமன் நல்லோரைக்காத்து அல்லோரை அழிக்க அவதாரமெடுத்த உண்மையைக் குறிப்பாக உணர்த்தியது எனலாம். 19 |