4. சடாயு காண் படலம்

265.'தக்கன் நனி வயிற்றுஉதித்தார் ஐம்பதின்மர்
     தடங் கொங்கைத் தையலாருள்,
தொக்க பதின்மூவரை அக் காசிபனும்
     புணர்ந்தனன்; அத்தோகைமாருள்,
மிக்க அதிதிப் பெயராள் முப்பத்து
     முக் கோடி விண்ணோர் ஈன்றாள்;
மைக் கருங் கண் திதி என்பாள் அதின்
     இரட்டி அசுரர்தமை வயிறு வாய்த்தாள்.

    ஐம்பதின்மர் - ஐம்பது பேர்; விண்ணோர் - தேவர்கள்;
இரட்டி - இரண்டு மடங்கு.                                24-1