266. | தானவரே முதலோரைத் தனு பயந்தாள்; மதி என்பாள் மனிதர்தம்மோடு- ஆன வருணங்கள் அவயவத்து அடைவே பயந்தனளால்; சுரபி என்பாள் தேனுவுடன் கந்தருவம் மற்று உள்ள பிற பயந்தாள்; தெரிக்குங்காலை, மானமுடைக் குரோதவசை கழுதை, மரை, ஒட்டை, பிற, வயிறு வாய்த்தாள். |
தானவர் - அரக்கர்; வயிறு வாய்த்தாள் - கர்ப்பம் உற்றாள். 24-2 |