2660. 'சொன்ன நான்முகன்தன்
     வழித் தோன்றினர்
முன்னையோருள், உயர்
     தவம் முற்றினார்
உன்னின் யார் உளர்?
     உன் அருள் எய்திய
என்னின் யார் உளர்,
     இற் பிறந்தார்?' என்றான்.

    சொன்ன நான்முகன் தன்வழித் தோன்றினர் முன்னையோருள் -
சிறப்பாகக் கூறப் பெற்ற பிரமனின் வமிசத்தில் பிறந்தவர்களாகிய முதன்மை
பெற்ற பண்டையமுனிவர்களுள்; உயர்தவம் முற்றினார் உன்னின் யார்
உளர் -
சிறந்த தவத்தை முற்றச்செய்தவர் உன்னைப் போல வேறு எவர்
இருக்கின்றனர்?; உன் அருள் எய்திய இற்பிறந்தார்என்னின் யார் உளர்
என்றான் -
உன் அருளை அடைந்த இல்வாழ்க்கையில் தோன்றினோர்
என்னைப் போலப் பேறு பெற்றவர் வேறு எவர் உள்ளார் எனக் (இராமன்)
கூறினான்.

     சொன்ன - ஆன்றோர் யாவரும் புகழ்ந்து கூறிய என்றுமாம்.
நான்முகன் வழியில்தோன்றியவர் அந்தணர் ஆவர். உயர்தவம் முற்றினார்
என்ற தொடர் 'சுதீக்கணன்' என்றபெயரினை (2657) விளக்கி நிற்கிறது.
இற்பிறந்தார் - நற்குடியில் பிறந்து இல்லறத்திலேவாழ்பவர்; உன்னின் -
ஆலோசித்தால் என்றுமாம், முனிவரின் அருளைப் பெற்றதால் என்னினும்
பேறு பெற்றவர் யாருமில்லை என்றான், தற்புகழ்ச்சியன்று.             30